Friday, January 20, 2012

எனை தொலைத்திருந்தேன்...

எங்கும் தேடினேன் காணவில்லை...
எங்கு தொலைத்தேன் தெரியவில்லை...
என்று தொலைத்தேன் நினைவில்லை...
ஏன் தொலைத்தேன் புரியவில்லை...
எப்படி தொலைத்தேன் விளங்கவில்லை..

பல நாள் கழித்து புரிந்தது...
உனை மறந்திருந்தேன் எனை தொலைத்துவிட்டேன்...
நீ இன்றி நான் இல்லை...
இனி என்றும் உனை மறவேன்...
என் காதலே என் உயிரே என் தமிழே...